வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
அவர் 36 வயதான இந்திய நாட்டவர் என்றும், மேலும் அவர் சமீபத்தில் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பினார் என்றும் MOH கூறியுள்ளது.
இந்திய ஊழியர் விபத்தில் சிக்கி மரணம்; சிங்கப்பூரில் தொடரும் வேலையிட இறப்புகள்
தற்போது அவர் தொற்று நோய் தடுப்பு தேசிய நிலையத்தில் (NCID) சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.
அவருக்கு கடந்த ஜூன் 28 முதல் நோய்க்கான அறிகுறிகளான சொறி உள்ளிட்ட பிற அறிகுறிகள் படிப்படியாக அதிகரித்ததாக MOH தெரிவித்துள்ளது.
தொடர்புத் தடமறியும் பணிகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை