சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் எட்டு பேர் மட்டுமே எளிதில் மாற்றப்படத்தக்க வேலைவாய்ப்பு அனுமதியை ஊழியர்களுக்கு வழங்குகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
“நெகிழ்வான வேலை ஏற்பாடுகளில் முத்தரப்பு தரநிலையை பல நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.”
இந்நிலையில், அதுபோன்ற நிறுவனங்கள் ஊழியர்களின் திறமைகளை ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஊழியர்கள் எவ்வாறு எளிதில் மாற்றப்படத்தக்க வேலை ஏற்பாடுகளை அணுகலாம், அவர்களின் இந்த கோரிக்கைகள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றன, மேலும் அதனால் வரும் பின் விளைவுகள் ஊழியர்களுக்கு எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது என்பதற்கான தெளிவான கொள்கையை முத்தரப்பு தரநிலைய கொண்டுள்ளது.
ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், அவர்களின் தனித்துவ திறமையை வெளிக்கொணரவும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் மனிதவள அமைச்சர் டான் சுட்டிக்காட்டி பேசினார்.
சிங்கப்பூரில் 13 ஆண்டுகளில் இல்லா அளவு எகிறிய விலைவாசி; தங்கும் விடுதிகளில் செலவுகள் கூடுமா?