என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்

Stomp

சிங்கப்பூர் நார்த்பாயிண்ட் சிட்டிக்கு வெளியே சிறுநீர் கழிக்க குந்தி அமர்ந்த பெண் சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக ஆகியுள்ளார்.

இந்த சம்பவம் யுஷூனில் உள்ள பொது இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) அன்று நடந்துள்ளது.

லாரி மோதி விபத்து… ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு

அந்த பெண் தன் ஆடையை அகற்றி சிறுநீர் கழித்ததைக் அவ்வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியுடன் கண்டனர்.

“இதனை குடும்பங்கள் அல்லது சிறு பிள்ளைகள் கண்டால் என்ன நினைப்பார்கள்… அவர்களை இது முகம் சுளிக்க வைக்கும்” என பலர் கூறி வருகின்றனர்.

“இந்த மாதிரியான நடத்தையை நம் சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? நான் ஒருபோதும் இதை நினைத்துக்கூட பார்த்ததில்லை. நாம் ஒரு நாகரீக சமூகம்” எனவும் கருத்துக்கள் எழுகின்றன.

சட்டம்

இதுபோன்ற முதல் தடைவை குற்றத்திற்கு S$1,000 வரை அபராதமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றத்திற்கு முறையே S$2,000 மற்றும் S$5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

கட்டுமான பணியில் வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர்… கவிழ்ந்து விழுந்த கலவை இயந்திரம்