சிமி அவென்யூவில் (Simei Avenue) கடந்த ஜூலை 28 அன்று மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி சம்மந்தப்பட்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
இறந்தவர், 34 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து ITE College East வெளியே காலை 10 மணியளவில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
கட்டுமான பணியில் வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர்… கவிழ்ந்து விழுந்த கலவை இயந்திரம்
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிர் சேதத்தை ஏற்படுத்தியதற்காக 34 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.