சிங்கப்பூர்: கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது இரு கார் திருட்டு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜூரோங் ஈஸ்ட்டில் மரணத்தை ஏற்படுத்திய தீ விபத்து: அதே வீட்டில் மீண்டும் தீ – சோகத்துக்கு மேல் சோகம்
ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 52 மற்றும் பூன் லே டிரைவ் ஆகிய இடங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. அங்குள்ள கார் நிறுத்துமிடங்களில் இருந்து 2 கார்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணைகள், கேமராக்கள் மற்றும் சிசிடிவிகளின் உதவியுடன் அவர்கள் ஆறு பேரின் அடையாளங்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
14 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட அவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கைது செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட இரண்டு கார்களும் மீட்கப்பட்டன, அந்த ஆறு பேர் மீது இன்றும் நாளையும் (ஆக.18) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
மீண்டும் தீபாவளி ஒளியூட்டு: மின்னொளியில் ஜொலிக்க உள்ள லிட்டில் இந்தியா…!