தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நிறுவனமான கிராப், சில போட்டியாளர்கள் செய்ததைப் போல அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எண்ணமில்லை என கூறியுள்ளது.
பொருளியல் மந்தநிலை நிலவும் அதே வேளையில், ஊழியர்களை கவனமாக தேர்ந்தெடுத்து பணியமர்த்தியதாகவும் அது கூறியுள்ளது.
உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை
தலைமை இயக்க அதிகாரி அலெக்ஸ் ஹங்கேட் கூறுகையில்; ஊழியர்களை பணியமர்த்தல் குறித்து மிகவும் கவனமாகவும் நியாயமாகவும் செயல்பட்டதாகவும், இதன் விளைவாக பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யும் நிலைக்கு வரவில்லை, என்றார்.
10 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டுவரும் கிராப் நிறுவனத்தில் சுமார் 8,800 பேர் வேலை செய்வதாக அதன் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.