சிங்கப்பூரில் வேட்டியை கழட்டி ஓடவிடப்பட்ட பட்டுக்கோட்டை சாமியார் – ராஜ தந்திரங்கன் அனைத்தும் வீணாகி விட்டதே..!

pattukottai-siddhar-singapore fight

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரபலமான சாமியார் ஒருவர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.

ராஜ்குமார் என்ற அந்த சாமியார் கையில் குச்சியுடன் குத்தி பார்த்து அருள்வாக்கு சொல்வது இவரின் வழக்கம். இதனாலே அவர் பிரபலமானதால் ராஜ்குமார் ருத்ர சித்தர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.

வெளிநாட்டு ஊழியர்கள் என்ன அந்தக்கால அடிமைகளா? “சக மனிதர்களை இப்படியா நடத்துவது”… வெகுண்டெழுந்த பெண்

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒருவர் கடந்த 11 ஆம் தேதி இவரை தேடி சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். அவரின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனை நீங்க தான் சரிசெய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனையே அடுத்து சாமியாரை சிங்கப்பூர் அழைத்து சென்றுள்ளார் அவர். ஆனால், அங்கே சென்று பார்த்த இவருக்கு ஒரு ட்விஸ்ட் இருந்தது.

அங்கு இவரை போல இன்னொரு சாமியார் இருந்துள்ளார், இதனை அடுத்து இவர்களில் யார் உண்மையான சாமியார் என்பதில் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது.

இவ்வாறு போய்க்கொண்டு இருக்கையில், திடீரென நம்ம சிங்கப்பூர் சாமியார் பட்டுக்கோட்டை சாமியாரின் கழுத்தை அவர் போட்டிருந்த காவி துண்டோடு பிடித்து இழுக்கவும், பட்டுக்கோட்டை சாமி ஆடிப்போனார்.

”திருட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கியா டா” என ஆபாச வார்த்தை பயன்படுத்தி சிங்கப்பூர் சாமியார் பேச தொடங்கினார். ‘அகோரி தான நீ” என்றும் ”என் கண்ணை பாரு டா” என மிரட்டவும் பட்டுக்கோட்டை சித்தர் பயத்தில் கதிகலங்கினார்.

இதனை அடுத்து பயந்துபோன பட்டுக்கோட்டை சாமி, கதவை திறந்துகொண்டு அங்கிருந்து தெறித்தார். அப்போதும் விடாத நம்ம சிங்கப்பூர் சாமி பட்டுக்கோட்டை சாமியின் வேட்டியை பிடிங்கி அங்கிருந்து ஓடவிட்டார்.

அதனை அடுத்த அங்கிருந்து ஓட்டம் பிடித்த பட்டுக்கோட்டை சாமியார், சிங்கப்பூர் போலீசிடம் புகார் அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பூ போட்டு அதன் மேல நடந்து வரும் பட்டுக்கோட்டை சித்தருக்கு சிங்கப்பூரில் நடந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய இளைஞர்: போலீசை கண்டதும் தப்பியோட்டம் – மடக்கி பிடித்த போலீஸ்