திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான 49 வயதுடைய பெண் ஒருவர், தன்னைவிட வயது குறைவான ஆடவருடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருந்து பணம் பறித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
ஆடவர் தன் குடும்பத்தை ஏமாற்றி, பெற்றோர் சேமித்து வைத்திருந்த சுமார் S$150,000 வெள்ளியையும் பெண்ணிடம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை இல்லாததால் பெற்றோருடன் சண்டை.. சிங்கப்பூரில் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவருக்கு 12 பிரம்படி
அந்த பெண் மேலும் இரண்டு இளம் ஆண்களை காதல் வலையில் விழவைத்து, இருவரையும் நேரில் சந்திக்காமலேயே S$150,000க்கும் மேல் பணத்தை பறித்துள்ளார்.
2016 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில், அந்தப் பெண் 10 பேரிடம் இருந்து சுமார் S$880,448.40 பணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஆன்லைனில் சந்தித்த பிற நபர்களும் அடங்குவர்.
ஜாமீனில் வெளியே வந்த அந்த பெண், மேலும் இந்த குற்றங்களில் சிலவற்றை செய்தததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அக்.31ம் தேதி அந்த பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டுகள்: SIA, Scoot அதிரடி – 121 இடங்களுக்கு, 370,000 டிக்கெட்டுகள்