புக்கிட் பாடோக்கில் கார் ஒன்று கால்வாயில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து, 62 வயதான பெண் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று மார்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 3:25 மணியளவில், புக்கிட் பாடோக் வெஸ்ட் அவன்யூ 2 இல் நடந்த விபத்து குறித்து போலீசார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு
ஓரளவு தண்ணீரில் மூழ்கிய கருப்பு நிற கார் ஒன்று கால்வாயில் கிடப்பதை புகைப்படத்தில் காண முடிகிறது.
காரை கால்வாயில் இருந்து வெளியே எடுத்தபோது மழை பெய்து கொண்டிருந்ததால், கால்வாயில் நீர்மட்டம் சற்று உயர்ந்து காணப்பட்டது.
கார் சறுக்கி அதனுள் விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஓட்டுநர் சுயநினைவுடன் Ng Teng Fong பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
Video: https://www.facebook.com/SingaporeRoadAccident/videos/896782138864921/
கடும் சட்டங்கள் கொண்ட நாடு “சிங்கப்பூர்”.. இம்மி பிசகினாலும் மரண தண்டனை தான்