ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார், இந்த படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் தர்பார் படம் வெளியீட்டு விழா நாளை சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு..!
இந்த படம் மொத்தம் 60 திரைகளில் திரையிடப்பட உள்ளது. படத்தின் முதல் நாள் முதற்காட்சி நாளை காலை 6 மணி மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர் 600 டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிர்பயா வழக்கு; 4 குற்றவாளிகளுக்கும் ஜன.22 தூக்கு..!
மேலும், படம் திரையிடபடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே, பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்கியும், ரஜினி புகைப்படத்திற்கு ஆரத்தி எடுத்தும், தர்பார் பட டீ சர்ட் வழங்கியும், மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக கொண்டாட இருக்கின்றனர்.
தகவல் – சிங்கப்பூர் ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுதன்