coronavirus death: சீனாவில் இன்றைய (பிப்ரவரி 10) நிலவரப்படி, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 900ஆக அதிகரித்துள்ளது.
அதன் தினசரி அறிவிப்பின்படி, ஹூபேயின் சுகாதார ஆணையம் மத்திய மாகாணத்தில் மேலும் 2,618 புதிய சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 3 புதிய நபர்களை உறுதி செய்த சிங்கப்பூர்..!
முன்னர் அரசாங்கத்திலிருந்து வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சீனா முழுவதும் தற்போது 39,800-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் உள்ளன.
வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மில்லியன் கணக்கான மக்கள் ஹூபேயில் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
“உள்ளூர் அரசாங்கம் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு செல்லும் போதெல்லாம் கடைகளில் போதுமான பொருட்கள் இல்லை, எனவே நாங்கள் அடிக்கடி வெளியே செல்ல வேண்டும்” என்று வுஹானில் ஒரு பெண் AFP-க்கு தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் NTUC FairPrice கிளைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு…!
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சீன அமைச்சரவையின் ஊழியர்கள் வெவ்வேறு குழுக்களாக பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும், முக்கிய துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலையை கருத்தில்கொண்டு சுமூகமாக போக்குவரத்துக்கு சீன அரசாங்கம் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.