சீனாவின் பிரதான நிலப்பரப்பில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,113-ஐ எட்டியுள்ளது.
இது முந்தைய நாளிலிருந்து 97 அதிகரித்துள்ளது என்று நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் புதன்கிழமை இன்று இதனை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வெளிநாட்டு தொழிலாளி உட்பட சிங்கப்பூரில் மேலும் 2 புதிய கொரோனா வைரஸ் சம்பவம்..!
மேலும் சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் 94 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸ் முதன்முதலில் தோன்றிய தலைநகர் வூஹானில் 72 இறப்புகள் இதில் அடங்கும்.
சீனாவின் பிரதான நிலப்பரப்பில், நேற்று செவ்வாயன்று 2,015 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று சம்பவங்கள் இருந்தன, மேலும் இது ஜனவரி 30க்குப் பிறகு இந்த எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும்.
இந்நிலையில் சீனாவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 44,653-ஐ எட்டியுள்ளது.
Source : CNA
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 19 வெளிநாட்டு ஊழியர்கள்..!