சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த 1,364 நட்சத்திர ஆமைகள் – சோதனையில் பறிமுதல்

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்லவிருந்த சரக்குகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, நண்டுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக இருந்த 13 பாா்சல்களை சோதனை செய்ததில், அதிக எண்ணிக்கையில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் அதில் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்தனர்.

திருச்சி விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு – ஜன. 9 முதல் நடைமுறை!

அதில் 7 பார்சல்களில் சுமார் 1,364 நட்சத்திர ஆமைகள் இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த கடத்தல் கும்பல், போலி முகவரியை பயன்படுத்தி நட்சத்திர ஆமைகளை மலேசியாவுக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நட்சத்திர ஆமைகள், மலேசியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் உணவகங்களிலும், அலங்கார பொருட்களாகவும் பயன்படுவதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் மூன்று இந்தியர்களுக்கு சிறை தண்டனை