இந்திய அரசின் இருவழி விமான போக்குவரத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரக துபாய்க்கு வாரத்தில் மூன்று நாட்கள் மதுரையில் இருந்து தனியார் விமானம் இயக்கப்பட உள்ளது.
அதாவது இந்த விமான சேவை வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் துவங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.
துபாய் To மதுரை
துபாய் நேரப்படி, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை 3:35 மணிக்கு விமானம் புறப்பட்டு, இந்திய நேரப்படி மதுரைக்கு காலை 9:20 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை To துபாய்
இந்திய நேரப்படி, ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 11:50 மணிக்கு விமானம் புறப்பட்டு துபாய்க்கு மதியம் 2:35 மணிக்கு துபாய் நேரப்படி செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் – இந்தியா இடையே மீண்டும் எப்போது சேவை தொடங்கும் என பயணிகள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். தற்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வருகிறது.