தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் போண்டா மணி, இவருக்கு 2 கிட்னியும் செயலிழந்துவிட்டது, ICU-வில் உள்ள இவரின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று நடிகர் பெஞ்சமின் இரு நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டார்.
இலங்கையை சேர்ந்த நடிகர் போண்டா மணி, இளம் வயதில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தவர் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இயக்குனர் கே.பாக்யராஜ் ஒருமுறை வந்தார்.
அப்போது போண்டா மணியுடன் பாக்கியராஜுக்கு நட்பு ஏற்பட்டது. இதை அடுத்த பவுன்னு பவுனுதான் எனும் பாக்கியராஜ் படத்தில் துணை வேடத்தில் நடித்தார் போண்டாமணி. அதன் மூலமாக தான் போண்டா மணி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
வடிவேலு, விவேக் போன்ற மிக பெரும் காமெடி ஜாம்பவான்களுடன் சேர்ந்து போண்டா மணி கலக்கியிருக்கிறார்.
58 வயதாகும் அவருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் அவரின் உடல்நிலை மோசமான காரணத்தால், உதவி வேண்டி கண்ணீர் விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின்.
போண்டா மணிக்கு, இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும்.., அவரின் சிகிச்சைக்கு உதவுங்கள், என்றும் அவர் வீடியோ வாயிலாக பேசி இருந்தார்.
இந்நிலையில், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அரசியல் வாதிகள், பிரபல நடிகர்கள் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் என்ன அந்தக்கால அடிமைகளா? “சக மனிதர்களை இப்படியா நடத்துவது”… வெகுண்டெழுந்த பெண்