சிங்கப்பூரில் மேலும் 1,239 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (30/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (30/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,239 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,217 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 1,193 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 24 பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 22 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,64,725 ஆக உயர்ந்துள்ளது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனிதவளத் தேவை – அதிகரித்த வேலைவாய்ப்பு

கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 47 முதல் 87 வயத்துக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது 1,113 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 216 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 78 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இங்கிலாந்து-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

கடந்த நாளில் 1,399 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 276 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.