சிங்கப்பூரில் மேலும் 1 புதிய COVID-19 பாதிக்கப்பட்ட நபர் உறுதி; 3 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!

COVID-19 Singapore
1 new COVID-19 case in Singapore, 3 more patients discharged (Photo : REUTERS/Edgar Su)

சிங்கப்பூர் மேலும் ஒரு புதிய உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 சம்பவத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 20) பதிவுசெய்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தினசரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கூடுதலாக மூன்று நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது தற்போது வரை 37 பேர் வைரஸிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இதையும் படிங்க : பேருந்து, கனரக டிரெய்லர் சம்பந்தப்பட்ட விபத்து; கார் ஓட்டுநர் காயம்..!

நாற்பத்தெட்டு நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட அந்த நபர், 36 வயது சீன ஆடவர், மேலும் வேலை அனுமதி பெற்றவர்.

இவருக்கு சீனா சென்ற சமீபத்திய பயண வரலாறு எதுவும் இல்லை, தற்போது அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிக பணத்தொகையை அறிவிக்கத் தவறிய பெண்ணுக்கு $6,000 அபராதம்..!