சிறுமிகள், பெண்களிடம் சில்மிஷம்: பிடிபட்ட 10 பேர் – செக் வைத்த போலீஸ்

(Photo: TODAY)

பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகத்தின்பேரில் 10 ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

21 முதல் 50 வயதுக்குட்பட்ட அவர்கள் மீது இன்று வியாழக்கிழமை (ஜன. 19) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்

அதில் நான்கு பேர், 16 வயதுக்குட்பட்ட நபர்களிடம் தவறாக நடந்துகொண்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என சிங்கப்பூர் காவல் படையின் (SPF) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதில் 24, 25 மற்றும் 50 வயதுமிக்க ஆண்கள் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் 27 வயதுமிக்க ஆடவர் 14 வயது சிறுவனிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்கள் 22 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகத்தில் குற்றம் சாட்டப்படுவர் என கூறப்படுகிறது.