COVID-19: சிங்கப்பூர் ஆகாயப்படை வீரர்கள் உட்பட புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 178ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதையும் படிங்க : வணிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செந்தோசாவிற்கு இலவச அனுமதி..!

குணமடைந்தோர்

மேலும், மருத்துவமனையிலிருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது என்றும் MOH தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மூன்று பேர்; 92, 106 மற்றும் 148 சம்பவங்களில் உறுதிப்படுத்தப்பட்டவர்கள்.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் மீதமுள்ள 82 பேரில் பெரும்பாலானவர்கள் சீராகவும் நிலையில் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் சாஃப்ரா ஜூரோங் குழுமத்துடன் தொடர்புடையவர்.

மேலும் 8 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். இதில், மூன்று பேர் சிங்கப்பூர் ஆகாயப்படை (RSAF) வீரர்கள்.

ஒருவர், முன்னர் வெளிநாட்டிலிருந்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு வந்தவரோடு தொடர்புடையவர்.

இருவருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் கவத்திற்கு..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil