தாக்குதல் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக 18 வயதிற்குட்பட்ட 131 பேர் கைது!

Photo : Singapore Police

கடந்த மூன்று ஆண்டுகளில் தாக்குதல் தொடர்பான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக 18 வயதிற்குட்பட்ட 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை உள்துறை அமைச்சகத்தின் மாகாண அமைச்சர் (MHA) டெஸ்மண்ட் டான் இன்று (ஆகஸ்ட் 3) தெரிவித்தார்.

லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்

கடந்த ஜூலை 19 அன்று ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை பெறுவதை கட்டுப்படுத்த தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா? என்ற நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூவின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இந்த சம்பவத்தில், பறிமுதல் செய்யப்பட்ட கோடாரி ஆன்லைனில் வாங்கப்பட்டது என்று ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று சட்ட, உள்துறை அமைச்சர் கே சண்முகம் கடந்த ஜூலை 20 அன்று கூறினார்.

தவறான கல்வித்தகுதிகளை சமர்ப்பித்த “Work Pass” வைத்திருக்கும் 11 பேர் பிடிபட்டனர்