தோ பாயோவில் HDB பிளாக்கின் கீழே நேற்று முன்தினம் (ஏப்ரல் 3) இரண்டு டீனேஜ் சிறுமிகள் இறந்து கிடந்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.
பிளாக் 143 லோராங் 2 தோ பாயோவில், இயற்கைக்கு மாறான மரணம் குறித்து அன்று இரவு 10.02 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிறுவனம் ஒன்றின் கணினியில் சட்டவிரோத ஊடுருவல்: வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளியானது
அங்கு 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் பிளாக்கின் கீழ் அடிவாரத்தில் அசைவில்லாமல் கிடந்தனர்.
அதனை அடுத்து, சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையின் துணை மருத்துவர்கள் அந்த சிறுமிகள் சம்பவ இடத்தில் இறந்ததை உறுதி செய்தனர்.
அந்த இரு சிறுமிகளும் புளோக்கின் 26வது மாடியிலிருந்து விழுந்ததாக டுடே குறிப்பிட்டுள்ளது.
இந்த மரணத்தில் எந்த எந்தவித சதிச்செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்று SPF தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
டான்ஜோங் கடற்கரையில் ஆடவரை தாக்கிய திருக்கை மீன் – பொதுமக்கள் கவனம்