நாள் ஒன்றுக்கு சுமார் 20 மணி நேரம் வேலை வாங்கிய நிறுவனங்கள் – MOM அதிரடி நடவடிக்கை

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்
MOM

மனிதவள அமைச்சகம் (MOM) பல தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது பற்றி நாம் அறிவோம்.

தற்போது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நாள் ஒன்றுக்கு 20 மணிநேரம் வரை வேலையில் அமர்த்திய நிறுவனங்களுக்கு எதிராகவும் MOM நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜூரோங் தங்கும் விடுதியில் தரமில்லாத உணவு வழங்கல் போன்ற மீறல்கள் குறித்து புகார் – MOM விசாரணை

அனுமதிக்கப்பட்ட வேலை செய்யும் நேர வரம்புகளுக்கு அதிகமாக தங்கள் அதிகாரிகளை வேலையில் ஈடுபட வைத்ததற்காக, வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் Erawan Security Services மற்றும் Volantra Security நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த இரண்டு நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையில் பல சந்தர்ப்பங்களில், ஒரு நாளில் 17 முதல் 20 மணி நேரம் வரை மீண்டும் மீண்டும் ஷிப்ட் வேலை செய்ததாக கண்டறியப்பட்டது.

சட்டத்தின்கீழ், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேல் வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று MOM இன்று (அக். 14) கூறியது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான அமலாக்க நடவடிக்கைகளில், கிட்டத்தட்ட 200 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை MOM ஆய்வு செய்தது. அங்கு குறிப்பாக வேலை நேரம் மற்றும் கூடுதல் நேர வரம்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டன.

சுமார் 36 சதவிகித நிறுவனங்கள் இந்த மீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது.

“சிங்கப்பூர்-சென்னை-திருச்சி” இடையே கூடுதல் விமான சேவை