சிங்கப்பூர்-தமிழ்நாடு இடையே பயணம் மேற்கொள்ள இனி கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது இந்த அக்டோபர் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆடவருடன் குளியலறை டிக்டாக் காணொளி – வீட்டுப் பணிப்பெண் மீது குற்றச்சாட்டு
வரும் அக்டோபர் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் “சிங்கப்பூர் to சென்னை” இடையே கூடுதலாக விமானங்களை இயக்க உள்ளதாக அது அறிவித்துள்ளது.
அதே போல, அக்டோபர் 18, 20, 22, 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் “சிங்கப்பூர் to திருச்சி” இடையே கூடுதலாக விமானங்களை இயக்க உள்ளது.
#FlyWithIX: Additional flights in October 2021!
Fly more from Singapore to Chennai and Trichy in October 2021!@IndiainSingapor pic.twitter.com/ONNnEPTUMM
— Air India Express (@FlyWithIX) October 14, 2021
மேலும், முன்பதிவு அலுவலகங்கள், கால் சென்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் நீங்கள் செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.
இது பற்றிய கூடுதல் விவரங்களை அதன் இணையப்பக்கத்தில் காணலாம்.
சிங்கப்பூர் கடல்கரையில் காணப்படும் பச்சை பாம்பு போன்ற மீன் – காணொளி