“26 வயது பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

"26 வயது பெண்ணை காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூரில் 26 வயது பெண்ணை காணவில்லை; அவர் குறித்து தகவல் கிடைத்தால் சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

32 பேரக்குழந்தைகள், 46 கொள்ளுப் பேரக்குழந்தைகளைப் பிரிந்து சென்ற 106 வயது பாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்!

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது பெண்ணை, டிசம்பர் 11- ஆம் தேதி அன்று காலை 05.00 மணி முதல் காணவில்லை. அவர் கடைசியாக, புளோக் 229 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21- ல் (Blk 229 Jurong East St 21) காணப்பட்டுள்ளார்.

பாயா லெபார் MRT நிலையத்துக்குள் சண்டை – 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

இந்த பெண் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தாலோ (அல்லது) இந்த பெண்ணை யாராவது பார்த்தாலோ உடனடியாக, சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்ந்து கொண்டு தகவல் கொடுக்கலாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.