சிங்கப்பூரில் 26 வயது பெண்ணை காணவில்லை; அவர் குறித்து தகவல் கிடைத்தால் சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூரில் வசித்து வந்த 26 வயது பெண்ணை, டிசம்பர் 11- ஆம் தேதி அன்று காலை 05.00 மணி முதல் காணவில்லை. அவர் கடைசியாக, புளோக் 229 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21- ல் (Blk 229 Jurong East St 21) காணப்பட்டுள்ளார்.
பாயா லெபார் MRT நிலையத்துக்குள் சண்டை – 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்
இந்த பெண் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தாலோ (அல்லது) இந்த பெண்ணை யாராவது பார்த்தாலோ உடனடியாக, சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்ந்து கொண்டு தகவல் கொடுக்கலாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.