சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 21) பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் S$66,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைமருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைமருந்துகளில் சுமார் 273 கிராம் ஐஸ், 144 Ecstasy மாத்திரைகள், இரண்டு Erimin-5 மாத்திரைகள் மற்றும் 317 கிராம் கெட்டமின் ஆகியவை தேங்காயில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பொங்கோல் ஈஸ்ட் HDB பிளாட் ஒன்றில் தீ விபத்து – விசாரணை தொடர்கிறது..!
மேலும், இந்த நடவடிக்கையின் போது S$6,000 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை, அப்பர் செரங்கூன் சாலைக்கு அருகில், 50 வயது சிங்கப்பூரர் மற்றும் 37 வயதான மலேசியர் சம்பந்தப்பட்ட சந்திப்பை CNB அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதனை தொடர்ந்து, 37 வயதான அந்த ஆடவர் மோட்டார் சைக்கிளில் புறப்படுவதற்கு முன்பு 50 வயதானவருக்கு சில போதைமருந்துகளை கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அவரை கைது செய்வதற்கு முன்பு அதிகாரிகள் அந்த நபரை கெய்லாங் சாலை பகுதிக்கு பின்தொடர்ந்து சென்றனர். அதன் பின்னர் அவர் வைத்திருந்த சுமார் 1 கிராம் ஐஸ் கொண்ட ஒரு பாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.
CNB அதிகாரிகளின் ஒரு தனி குழு, அப்பர் செரங்கூன் சாலைக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பிரிவில் உள்ள இடத்தில் சோதனை நடத்தியதில், 50 வயதான ஒருவரையும், மேலும் 60 வயது சிங்கப்பூர் ஆடவரையும் கைது செய்தனர்.
இதில் சந்தேக நபர்கள் அனைவரின் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!