கார்-லாரி கடும் விபத்து: மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

3-singaporean-women-killed-jb-accident
Komuniti Johor

மலேசியாவின் ஜோகூரில் ஆகஸ்ட் 28, திங்கட்கிழமை நடந்த விபத்தில் மூன்று சிங்கப்பூர் பெண்கள் உயிரிழந்தனர்.

அன்று மதியம் 2 மணியளவில் அவர்கள் பயணித்த வாகனம், லாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நீரில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு ஆடவர் உடல் – போலீஸ் விசாரணை

இந்த விபத்து லடாங் செனாஸ், பந்தர் தெங்கரா என்ற இடத்தில் நடந்துள்ளது. அதாவது சிங்கப்பூரில் இருந்து ஒரு மணி நேரத்தில் அங்கு பயணம் செய்ய முடியும்.

வாகனத்தில் பயணித்த மூன்று சிங்கப்பூர் பயணிகள் தோ போ கியான் (56) சூன் மோ டான் (61) மற்றும் வோங் லான் யூ (61) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

அந்த வாகனத்தை இயக்கிய 59 வயது சிங்கப்பூரர் ஓங் சியோவ் லாம் மற்றும் 49 வயதுமிக்க லாரி ஓட்டுநரும் காயமின்றி தப்பினர்.

கார் முற்றிலுமாக நொறுங்கியதையும், லாரி ஓரத்தில் இருப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் குறைந்த விலையில் iPhone வாங்க போறிங்களா? உஷார்