கெப்பல் பேயில் உள்ள நீரில் 24 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் உடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
கடந்த வாரத்தில் மட்டும் அப்பகுதியில் மீட்கப்படும் இரண்டாவது உடல் இதுவாகும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் Labrador Parkஇல் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காலை 11.15 மணியளவில் மீட்பு உதவிக்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) வரவழைக்கப்பட்டது.
லாப்ரடோர் பூங்காவில் இருந்து சுமார் 3.4 கிமீ தொலைவில் உள்ள கெப்பல் பே மெரினாவிற்கு அருகில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
அவர் இறந்ததை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர் உறுதி செய்து அறிவித்தார்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சதிச் செயல் ஏதும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை நடந்து வருகின்றன.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை, 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரின் சடலமும் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூரில் குறைந்த விலையில் iPhone வாங்க போறிங்களா? உஷார்