ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது!

ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது!
Photo: Trichy Customs

 

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூபாய் 1.85 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆடவர் ஒருவரை கடித்த மலைப்பாம்பு.. கட்டுமான ஊழியருடன் சேர்ந்து பாம்பை பிடித்தபோது நடந்த விபரீதம்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான 3 பயணிகளைத் தனியே அழைத்துச் சென்று சோதனை செய்த போது, அவர்கள் தங்களது ஆசன வாயில் மறைத்து வைத்து 3 கிலோ 85 கிராம் தங்கத்தைக் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைதுச் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘மாண்டாய்’ உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 1.85 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.