சிங்கப்பூரில் புதிதாக 355 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு!

MOH revamps coronavirus reports
Pic: Ooi Boon Keong/TODAY

சிங்கப்பூரில் நேற்று (16/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, புதிதாக 355 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 324 பேருக்கு பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 315 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 9 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 31 பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,74,972 அதிகரித்துள்ளது.

எளிதாக Work Permit கிடைக்குமா? மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள்!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 808 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, 504 மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 68 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 34 பேர் ஐ.சி.யூவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 4 பேரின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

சுமார் S$167,000 மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 847 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்தவர்கள் உடனடியாக தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.