பாசிர் ரிஸ் சென்ட்ரலில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை திருடியதாக 4 இளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என போலீசார் கூறியுள்ளார்.
பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.22) காலை 8.40 மணியளவில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த நபரிடமிருந்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
“தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், பெடோக் போலீஸ் பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
அதன் பின்னர், அக்டோபர் 24 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளையர்களுக்கு மற்றொரு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்திலும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
திருட்டுபோன மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர்.
விசாரணை தொடர்கிறது.
வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்