சிங்கப்பூரில் நேற்றைய அறிவிப்பில், 41 COVID-19 தொற்று பாதித்த நபர்கள், மொத்த எண்ணிக்கையிலிருந்து நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அடுத்த கட்ட சோதனைகளில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்பப்படுத்தப்பட்டதை அடுத்து, இதனை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்..!
சிங்கப்பூரில் நேற்று புதிதாக 49 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சமூக அளவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிங்கப்பூரரும் ஒருவர் ஆவார்.
மேலும், இந்த புதிய நபர்களில் 3 பேர் இந்தியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அதில் 2 பேர் வேலை அனுமதி சீட்டு
வைத்திருப்பவர்கள். இருவரும் சிங்கப்பூர் வந்த உடனே தனிமைப்படுத்தப்பட்டனர்.
மற்ற 2 பேர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள். அவர்களுக்குக் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை என்றும் அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் என்றும் MOH தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் COVID-19 தொற்று இல்லை என அறிவிப்பு செய்யப்பட்ட, 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதாவது Toh Guan Dormitory, Changi Lodge II மற்றும் North Coast Lodge ஆகிய 3 இடங்களில் புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் (MOH) அடையாளம் கண்டுள்ளது.
இதையும் படிங்க : அரசாங்கம் “எப்போதும் சிங்கப்பூரர்களின் பக்கம் இருக்கும்” – பிரதமர் லீ..!