சிங்கப்பூரில் மேலும் 548 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

548 new Covid-19 cases in Singapore; 3 are citizens and PRs
548 new Covid-19 cases in Singapore; 3 are citizens and PRs

சிங்கப்பூரில் நண்பகல் (மே 24) நிலவரப்படி, புதிதாக 548 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 31,616ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தொற்றிலுருந்து குணமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் 2 சொகுசுக் கப்பல்களில் தங்கவைப்பு..!

புதிய சம்பவங்களில், 3 பேர் சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசி என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மீதமுள்ள சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மேலும் 900க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!