“66 வயது முதியவரை மூன்று நாட்களாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

"66 வயது முதியவரை மூன்று நாட்களாக காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 66 வயது மலாய் முதியவரை கடந்த அக்டோபர் 27- ஆம் தேதி காலை 10.00 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, புளோக் 596ஏ அங் மோ கியோ தெரு 52- ல் (Blk 596A Ang Mo Kio Street 52) இருந்துள்ளார். எனினும், அவர் அணிந்திருந்த உடை தெரியவில்லை.

‘ஹைதராபாத்- சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை’- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இவரை யாரேனும் பார்த்தால் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் என்ற 999 தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், காணாமல் போன முதியவரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.

வாகனத்தில் தன்னுடன் வந்த ஆடவரை தாக்கிய நபர்.. கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் மரணம்

முதியவர் காணாமல் போய் மூன்று நாட்கள் ஆன நிலையில், காவல்துறையினர் பல்வேறு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.