COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – மொத்தம் 22ஆக உயர்வு..!

67-year-old Singaporean man is country's 22nd COVID-19 fatality
67-year-old Singaporean man is country's 22nd COVID-19 fatality

COVID-19 கிருமித்தொற்று காரணமாக 67 வயதான சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் சேர்ந்து நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் புங்க்கோல் பீல்ட் (Punggol Field) மரணம்: 20 வயதான சந்தேக நபர் கைது..!

சிங்கப்பூரில் சம்பவம் 1516 என அடையாளம் காணப்படும் இவருக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா பிரச்சனை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அவருக்கு COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது, மே 15 அன்று உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செங்காங் பொது மருத்துவமனை அவரது குடும்பத்தினரை அணுகியுள்ளது, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்று சுகாதார அமைச்சகம் (மே 16) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : சிங்கப்பூரில் புதிதாக 465 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!