“74e, 151e பேருந்து சேவைகள் ஜன.17 முதல் நிறுத்தப்படும்”- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd

சிங்கப்பூரில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd) இன்று (27/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்தாண்டு (2022) ஜனவரி 17- ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பேருந்து சேவை 74e நிறுத்தப்படும். மாறாக, பயணிகள் 74 என்ற எண் கொண்ட பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், (அல்லது) எம்.ஆர்.டி. (MRT) மூலம் பயணம் மேற்கொள்ளலாம்.

10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது சிங்கப்பூர்!

அதேபோல், 151e என்ற எண் கொண்ட பேருந்து சேவையும் (Bus Service) அடுத்தாண்டு ஜனவரி 17- ஆம் தேதி திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படும். மாறாக, பயணிகள் 151 என்ற எண் கொண்ட பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், (அல்லது) எம்.ஆர்.டி. (MRT) மூலம் பயணம் மேற்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் சுமார் 52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை – MOM

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் வாடிக்கையாளர் சேவை எண் 1800- 287- 2727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்.” இவ்வாறு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.