75- வது இந்திய குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க
வரும் ஜனவரி 26- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் 75- வது குடியரசுத் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசுத் தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்தியாவின் 75- வது குடியரசுத் தின விழாவையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கிரேஞ்ச் சாலையில் (31 Grange Road) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில், வரும் ஜனவரி 26- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 08.15 மணிக்கு இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்திய குடியரசுத் தின விழாவில், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
புக்கிட் பாஞ்சாங்கில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா- 2024!
குடியரசுத் தின விழாவில் பங்கேற்க உள்ளவர்கள் https://docs.google.com/…/1FAIpQLSfiK6DBnnn7qR…/viewform என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.