76 வயது மூதாட்டியைக் காணவில்லை என்றும், தகவல் கொடுக்குமாறும் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 89.51 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 76 வயது மூதாட்டியை டிசம்பர் 23- ஆம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, புளோக் 509ஏ யிஷுன் அவென்யூ 4- ல் (Blk 509A Yishun Ave 4) காணப்பட்டுள்ளார். இவர் சிவப்பு நிற டி-சர்ட்டை அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக, சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துவாஸ் அருகே ஏற்பட்ட விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்
ட்விட்டர் பதிவுடன் காணாமல் போன மூதாட்டியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது சிங்கப்பூர் காவல்துறை.