7-வது ‘World One Health Congress’ மாநாடு சிங்கப்பூரில் நாளை (07/11/2022) திங்கள்கிழமை அன்று தொடங்குகிறது. இந்த மாநாடு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் வந்துள்ளார். முன்னதாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துப் பெற்றார்.
சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதரைச் சந்தித்த அசோசேம் குழு!
நாளை (07/11/2022) தொடங்கும் ‘World One Health Congress’ மாநாடு, நவம்பர் 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.