சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 4) நிலவரப்படி, கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.
உயிரிழந்த எட்டு பேரும் சிங்கப்பூரர்கள், இதில் 4 பேர் ஆண்கள் மற்றும் 4 பேர் பெண்கள் அடங்குவர்.
தேக்கா நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் சோதனை – பாதுகாப்பு விதியை மீறியதாக 188 பேர் பிடிபட்டனர்
அவர்கள் அனைவரும் 60 முதல் 94 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
அவர்களில் மூன்று பேர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை மற்றும் ஐந்து பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்ததாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் தொற்றால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 121ஆக உள்ளது.