ஆடிப்பெருக்கையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் தாலிப்பெருக்கு பூஜை!

ஆடிப்பெருக்கையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் தாலிப்பெருக்கு பூஜை!
Photo: Hindu Endowments Board

 

 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆகஸ்ட் 3- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான பல திட்டங்கள்

பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் தாலிப்பெருக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர்.

வெளிநாடுகளில் தங்கிய சிங்கப்பூர் PR… தகுதியை இழந்த விவரம்

அதைத் தொடர்ந்து, அம்மன் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.