லாரி, சிற்றுந்து மற்றும் பைக் விபத்து: 27 வயதுமிக்க ஆடவர் மரணம் – பயணி ஒருவர் கைது

LYNN LONG-YAM

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் சிற்றுந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கி 27 வயதுமிக்க ஆடவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்தார்.

இதனை அடுத்து, சிற்றுந்தில் பயணித்த 38 வயதுமிக்க ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை

அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன்கிழமை காலை 11 மணியளவில் மெரினா கோஸ்டல் விரைவுச்சாலை வெளியேறுவதற்கு முன்பு, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை மற்றும் SCDF ஆகியவை கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவின்றி டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் பின்னர் அவர் இறந்தார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு