சிங்கப்பூர் பொங்கோல் ஈஸ்ட் ரோட்டில் மூன்று கார்கள் மற்றும் ஒரு டாக்ஸி சம்பந்தப்பட்ட விபத்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!
அன்று இரவு 7.40 மணியளவில் பொங்கோல் ஈஸ்ட் ரோட்டில், பொங்கோல் டிரைவ் நோக்கி செல்லும் நான்கு வாகனங்கள் சம்மந்தப்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்தாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இதில் 64 வயதான கார் ஓட்டுநர் ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டுச் செல்லப்பட்டார்.
அதே நேரத்தில் 33 வயதான பெண் பயணி ஒருவர் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியில் ரோட்டின் நடுவில் ஒரு கருப்பு வாகனம் கவிழ்ந்து கிடப்பதை காணமுடிகிறது.
மேலும், பல அவசரகால வாகனங்களும் சம்பவ இடத்தில் இருந்தன. விபத்து குறித்த காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கள்ள சிகரெட்டை எந்த வழியில் விற்றாலும் அதிகாரிகளிடம் இருந்து தப்ப முடியாது..!