துவாஸில் உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் லாரி மோதிய விபத்தில் 25 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று புதன்கிழமை (அக் 25) அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்த அந்த ஆடவர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என சொல்லப்பட்டுள்ளது.
பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்
துவாஸ் வியூ லிங்க் மற்றும் துவாஸ் வியூ வாக் 2 சந்திப்பில் நேற்று காலை 7.45 மணியளவில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து குறித்து தகவல் வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டியை சோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) துணை மருத்துவர், ஓட்டுநர் இறந்ததை உறுதி செய்தார் என போலீசார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 46 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்