இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: 4 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் கைது

Bharath Ghanta/Google Maps

பூன் லே பேருந்து முனையத்தில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் நான்கு பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று முன்தினம் டிசம்பர் 29 அன்று நடந்த இந்த விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

இதில் SMRT எண் 178 பேருந்தும், SBS டிரான்சிட் எண் 199 பேருந்தும் மோதிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

61 ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 3 இல் நடந்த இந்த சம்பவம் குறித்து டிசம்பர் 29 அன்று இரவு 9.10 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய 40 மற்றும் 77 வயதுக்கு உட்பட்ட நான்கு பெண் பயணிகள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதாவது அவர்கள் அனைவரும் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இந்நிலையில், 56 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவர் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

லாரி மற்றும் வேன் மோதி விபத்து: 21 வயதான ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணம்

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்