செம்பவாங்கில் திங்கள்கிழமை காலை பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சங்கிலி தொடர் மோதலில் சிக்கிய மெக்டொனால்டு விநியோக ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து
இதில் 68 வயதான பேருந்து ஓட்டுநர் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டதாக டவர் ட்ரான்சிட் சிங்கப்பூர் (TTS) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்நிலையில், அவருக்கு வாகனம் ஓட்ட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.
38 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் TTS செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பேருந்து ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவி வருவதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.