ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு…

(photo: mothership)

ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு அடுத்த வாரத்தில் இருந்து படிப்படியாகத் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாயன்று (டிசம்பர் 14) தெரிவித்தார்.

மேலும், Pfizer-BioNTech/Comirnaty தடுப்பூசி டோஸ்கள் வரும் தேதியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது என்றும் திரு சான் ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

Omicron கிருமியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்: “பூஸ்டர்” தடுப்பூசி முக்கிய பகுதியாக இருக்கும் – பிரதமர் லீ

“திட்டமிட்டபடி தடுப்பூசி டோஸ்கள் வரும் பட்சத்தில், அடுத்த வாரம் தடுப்பூசிகளுக்கான முன்பதிவை படிப்படியாகத் தொடங்குவோம்.”

பின்னர், பெரிய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை டிசம்பர் 2021 இறுதியில் இருந்து தொடங்கும், என்றார்.

மேலும், அடுத்த 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிறுவர்களுக்கு அந்த பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி டோஸ்கள் வருகை பற்றிய விவரங்கள் உறுதிசெய்யப்பட்டவுடன் கூடுதல் தகவல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை