மதுரை சர்வதேச விமான நிலையத்தில் (Madurai International Airport) இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பயண நேரம் ஐந்து நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், விமான பயணிகளின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையிலும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Singapore Trending: பெரிய தலை கொண்ட மீனை விழுங்க முயற்சிக்கும் பாம்பின் அழகிய படங்கள்
பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் பிப்ரவரி 19- ஆம் தேதி வரை சிங்கப்பூர் நேரப்படி சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையத்திற்கு காலை 07.55 மணிக்கு வந்தடையும் என்றும், மறுமார்க்கத்தில் மதுரை விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 09.00 மணிக்கு புறப்பட்டு, சிங்கப்பூர் நேரப்படி மாலை 04.00 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ (அல்லது) மதுரை விமான நிலையத்தையோ அணுகலாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“லாவெண்டரில் உள்ள ‘Muted Gelato’ பானக்கடை நள்ளிரவு வரை திறந்திருக்கும்” என அறிவிப்பு!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.