Singapore Trending: பெரிய தலை கொண்ட மீனை விழுங்க முயற்சிக்கும் பாம்பின் அழகிய புகைப்படத்தை சிங்கப்பூர் புகைப்படக்கலைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
நீர்ப்பாம்பு ஒன்று சகதி மீனைச் சுற்றிக் கொண்டு அதை விழுங்க முயற்சி செய்வதை ஜே கே டேரில் டான் என்ற அவர் புகைப்படமாக எடுத்துள்ளார்.
மது போதையில் இருக்கும் பெண்களிடம் உறவு கொண்டு படம்பிடித்த ஆடவர் – சிறை, பிரம்படிகள் விதிப்பு
சிங்கப்பூரில் இந்த வகை மீன் இருந்ததற்கான முதல் ஆதாரமாக இந்த புகைப்படம் அமைந்தது.
இந்த புகைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3, அன்று பாசிர் ரிஸ் பூங்காவில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து மதர்ஷிப்பிடம் பேசிய டான், அந்த நேரத்தில் இதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று பகிர்ந்து கொண்டார்.
மீனை கொன்று உண்டு உயிர் வாழ்கிற பாம்பின் செயலால் தாம் ஈர்க்கப்பட்டதாக டான் கூறினார்.
வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது