மது போதையில் இருக்கும் பெண்களிடம் உறவு கொண்டு படம்பிடித்த ஆடவர் – சிறை, பிரம்படிகள் விதிப்பு

man-film-molest-women-caning

சிங்கப்பூர்: தனது காதலரின் கைப்பேசியில் ​​தாம் மது போதையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட சில தவறான புகைப்படங்களைக் கண்டு பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது காதலர் ரகசியமாக படம்பிடித்த காணொளி ஒன்றும் அந்த கைபேசியில் சிக்கியது.

வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது

இதனால் வெறுப்படைந்த பெண், அவரிடம் இருந்து பிரிந்து சென்று இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் அவரிடம் உள்ள சாதனங்களை சோதித்த போலீசார், இதேபோன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிந்தனர்.

அதில் குறைந்தது நான்கு பெண்கள் ஆடைகள் அவிழ்ந்த நிலையிலும், அவர்களிடம் பாலியல் செயல்களைச் செய்வது போன்றும் இருந்தன.

அவர் படம்பிடித்த நான்கு பெண்கள் குடிபோதை மற்றும் மயக்க நிலையில் இருந்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதில் இருவர் மாணவர்கள் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், தற்போது 25 வயதாகும் அந்த நபருக்கு 25 மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

வெளிநாட்டு பிரச்சனை தொடர்பில் சிங்கப்பூரில் பேரணி, முழக்கம் – போலீஸ் விசாரணை